Thursday 17 September, 2009

பகுத்தறிவுப் பகலவரே..! - வசனகவிதை




பகுத்தறிவுப் பகலவரே..!
புரட்சிக்
கருத்துக்களை பகர்ந்தவரே..!

கொடுஞ் சாதிகளை எதிர்த்தவரே..!
சாதிக்
கொடுமைகளை கொளுத்தியவரே..!

பெண்ணியததின் திருமகரே..!
பெண்
விடுதலையின் தலை மகரே..!

அறிவார்ந்த பெரியாரே..!
திராவிடத்தின்
அறியாமையினை அகற்றியவரே..!

மூடநம்பிக்கைகளை ஓழித்தவரே..!
எதையும்
முத்தாய்ப்பாய்ச் சொன்னவரே..!

ஏன்… எதற்கு… எப்படி என்றவரே..!
எதையும்
ஆராய்ந்து செய் என்றவரே..!

ஏற்றத் தாழ்வை அழித்தவரே..!
எல்லோரும்
எங்கும் சமம் என்றவரே..!

ஆரியத்தை அழித்தவரே..!
தமிழ்த்
திராவிடத்தை வளர்த்தவரே..!

ஒடுக்கப்பட்டவர்களின் ஒளியாரே..!
அவர்தம்
உரிமைகளை மீட்டெடுத்தவரே..!

வைக்கம் போராட்ட வீரரே..!
தீண்டாமையை
தீயிட்டழித்த தமிழ்த் தீரரே..!

விதவை மணத்தினை நடத்தியவரே..!
அதை
உலகெங்கும் நடாத்தியவரே..!

இறை மறுப்பை காட்டியவரே..!
பலருக்கும்
பகுத்தறிவை ஊட்டியவரே..!

உண்மையின் பாதுகாவலரே..!
பெண்ணியத்தின்
பெரும் போர் வீரரே..!

சின்னத்தாய் பெற்றெடுத்த சீலரே..!
தமிழ்த்தாய்
தத்தெடுத்த தமிழருவிக் காவலரே..!

இன்றோடு நீ பிறந்து 131 ஆண்டுகளாயிற்றே..!
இப் பொன்னாளில்
உன்னை நினைப்பவர்கள் சிலரே..!



2 comments:

Thamizhan said...

பெரியாரைப் புரிந்தார்
பெரியாரைப் புகழ்ந்தார்!

பெரியாரை இகழ்வார்
பெரியாரால் வாழ்ந்தார்!

புகழென்றோ இகழ்வென்றோ
வாழவுமில்லை வாடவுமில்லை.
துணிவொன்றே துணையாய்
அறிவொன்றே வழியாய்
சரித்திரம் படைத்தார்
மனிதனைக் கண்டார்!

நன்றி எதிர்பார்த்தால்
தொண்டல்ல தொழிலென்றார்!
பிறந்தநாள் இன்றென்றே
பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

மோகனன் said...

அருமை தோழரே...

என்னை விட பெரியோர்கள் இருக்கும் போது, அடியேன் அவசரப்பட்டு விட்டேனோ.. எனத் தோன்றுகிறது...

நன்று.. நன்றி...